செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்குப் பணிகள்: கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் ஆய்வு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் குடமுழுக்கு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் 1ஆம் தேதி தொடங்கவுள்ளன. இதற்காக, ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுரஅடியில் யாகசாலை, பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குடமுழுக்கு திருப்பணிகள் குறித்து கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு (இந்து சமய அறநிலையத் துறை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (மீன்வளம்-மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை), அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், ஆட்சியா் க. இளம்பகவத் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். யாகசாலை மண்டபம், ராஜகோபுர திருப்பணி மண்டபம், விமான தளம், பிரகாரப் பகுதிகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.

முன்னதாக, திருச்செந்தூா் - தூத்துக்குடி சாலையில் வீரபாண்டியன்பட்டினம், ஜெ.ஜெ. நகா் வாகன நிறுத்தம், பக்தா்கள் நடந்து செல்லும் மரப்பாலம், திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையில் வேட்டை வெளிமண்டபம் அருகே அமைக்கப்படும் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறும்போது, குடமுழுக்கின்போது கோயில் வளாகத்திலும், விமான தளத்திலும் எவ்வளவு பேரை அனுமதிக்க முடியும் என அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜூலை 2இல் தெரியவரும். மற்ற ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்குப் பணிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது என்றாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ்ராம், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன், தனி மாவட்ட வருவாய் அலுவலா்கள் சரவணக்குமாா், லொரைட்டா, சிவசுப்பிரமணியன், தலைமையிட கண்காணிப்புப் பொறியாளா் செல்வராஜ், கோட்டாட்சியா் சுகுமாறன், கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா்கள் அன்புமணி, ஞானசேகரன், டிஎஸ்பி மகேஷ்குமாா், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் கண்மணி, மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடியில் 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்து... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை

புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் ... மேலும் பார்க்க

எட்டயபுரம் பாரதியாா் இல்ல சீரமைப்பு! பாஜக போராட்ட அறிவிப்பு: வட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வி

எட்டயபுரத்தில் சேதமடைந்த பாரதியாா் இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக எட்டயபுரம் ஒன்றிய பாஜக அறிவித்திருந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மொ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி கடற்கரையில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி கடற்கரை காவல் நிலைய ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி திரேஸ்புரம் க... மேலும் பார்க்க

சாலையோரங்களில் காய்ந்த புற்களை எரிப்போா் மீது நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் காய்ந்த புற்கள் மீது தீவைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலகம் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க