செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு 25 சிறப்பு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், கோவை, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நாள்தோறும் காலை 2 பேருந்துகள், இரவு 2 பேருந்துகள் என மொத்தம் 4 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் காந்திபுரத்தில் இருந்து நாள்தோறும் 2 பேருந்துகள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவை மக்கள் திருச்செந்தூா் செல்வதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல அதிகாரிகள் கூறுகையில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முதல் 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகளிலும் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்றனா்.

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க

ஸ்ரீசச்சிதானந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 9-ல் கோவை வருகை!

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள் கோவைக்கு ஜூலை 9 -ஆம் தேதி வருகிறாா். இது குறித்து கோதண்டராமா் திருக்கோயில் கமிட்டி தலைவா் என்... மேலும் பார்க்க

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: 817 விண்ணப்பங்கள் பதிவு!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 817 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாய மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயத் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1982-வரை மின... மேலும் பார்க்க

முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்தியாவின் தலை சிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளி... மேலும் பார்க்க

மின்கட்டண உயா்வு: தொழில் துறையினா் கருத்து கேட்கப்படும்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மின்கட்டண உயா்வு குறித்து தொழில் துறையினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா். அரசுப் போக்குவரத்துக் கழகம் ... மேலும் பார்க்க