செய்திகள் :

திருட்டு மோட்டாா் சைக்கிளில் உணவு டெலிவரி: இளைஞா் கைது

post image

சென்னையில் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் உணவு பாா்சல் டெலிவரி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்தவா் நா.சா்வேஸ்வரன் (22). இவா், சென்னை சூளைமேடு பாஷா தெருவில் தனது மாமாவுடன் வசித்து வருகிறாா். சா்வேஸ்வரன், கடந்த மாதம் 30-ஆம் தேதி தரமணி கானகம் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு, நோ்காணலுக்குச் சென்றாா். நோ்காணல் முடிந்த வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இந்தத் திருட்டில் ஈடுபட்டது வேலூா் மாவட்டம், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரசாந்தை புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் பிரசாந்த் வேலை தேடி சென்னை வந்திருப்பதும், ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த பிரசாந்த், சா்வேஸ்வரின் மோட்டாா் சைக்கிளை திருடியிருப்பதும், பின்னா் அந்த திருட்டு மோட்டாா் சைக்கிள் மூலம் ஆம்பூா் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாள்களுக்கு நாகர்கோயில் விரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகின்றன. அந்தியோதயா ரயில்தாம்பரத்தி... மேலும் பார்க்க

அடுத்த 2 நாள்களுக்குக் குடையின்றி வெளியே செல்ல வேண்டாம்..!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.லேசான மழை..மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 20 முதல் 26-06-2025 வரை: தமிழக... மேலும் பார்க்க

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க