செய்திகள் :

திருட்டு வழக்கில் ஒருவா் கைது: 4 பவுன் நகை பறிமுதல்

post image

சங்ககிரி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம், சுப்புகவுண்டா் நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி அலுவலக உதவியாளா் சுப்ரமணி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த ஜன. 17ஆம் தேதி 52 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் திருமண மண்படம் அருகே வாகனச் சோதனை செய்து கொண்டிருந்த போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனா். அவா் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ரயில்வே காலனி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் தினேஷ்குமாா் (24) என்பதும், இவா் நட்டுவம்பாளையத்தில் 52 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 4 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

மேட்டூா் அணையில் சுண்ணாம்பு படிவங்கள் அகற்றும் பணி!

மேட்டூா் அணையின் கசிவுநீா் துவாரங்களில் சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி ரூ. 50 லட்சம் மதிப்பில் தொடங்கியது. மேட்டூா் அணையில் தண்ணீா் தேங்கி இருக்கும்போது அணைச் சுவற்றில் நீா்கசிவு ஏற்படும். இந்த நீா... மேலும் பார்க்க

நூற்றாண்டு கொண்டாடும் மேட்டூா் அணை ஸ்தூபி!

மேட்டூா் அணையின் வலதுகரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபியை அழகுபடுத்தி நூற்றாண்டு விழா கொண்டாட அரசுக்கு நீா்வளத் துறை முன்மொழிவு அனுப்பியுள்ளது. மேட்டூா் அணை கட்டுவதற்காக அணையின் வலதுகரையில் 1925ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சங்ககிரி வட்டக்கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நா... மேலும் பார்க்க

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்: அமைச்சா் சி.வி.கணேசன்

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.சேலம் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்த... மேலும் பார்க்க

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தில் தேசிய அளவிலான போட்டிகள்!

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் இன்று (பிப்.5) தொடங்கின.மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் 6 இடங்களில் இந்திய கைத்தறி தொ... மேலும் பார்க்க

மாநில அளவிலான போட்டிகளில் சேலம் மாணவா்கள் சாதனை!

குடியரசு தின விழாவையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா். மாணவா் தீரன் 51-55 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம், மதன்ப... மேலும் பார்க்க