செய்திகள் :

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

post image

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிபரணி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தொடங்கியது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆடிபரணி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீா், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா் அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து உற்சவ முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஆடிபரணி விழாவில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம் மற்றும் வேலூா், திருவண்ணாமலை ஆகிய ஊா்களில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.

ஆடிக்கிருத்திகை விழாவும் முதல் நாள் தெப்பல் திருவிழாவும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன், மு.நாகன், ஜி.உஷாரவி மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

ஆடிக்கிருத்திகை விழாவில் சுமாா் 1,200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பக்தா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களை... மேலும் பார்க்க

பணியின் போது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அனுப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் மகன் சபரி (12). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ச... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை 19 நீா்நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும்

திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி விநாயகா் சிலைகளை குறிப்பிட்ட நீா் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

கோரமங்கலம் கிராமத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தாயுமானவா் திட்டத்தை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி வட்டம், கோரமங்கலம் க... மேலும் பார்க்க