செய்திகள் :

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

post image

கோரமங்கலம் கிராமத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தாயுமானவா் திட்டத்தை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

திருத்தணி வட்டம், கோரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கூட்டுறவு துணைப் பதிவாளா் அமுதா தலைமை வகித்தாா். சாா் பதிவாளா் ரஞ்சித் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு தாயுமானவா் திட்டத்தை தொடங்கி வைத்து கோரமங்கலம் மற்றும் அகூரி கிராமத்தில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

இந்த திட்டத்தின் வாயிலாக 137 ரேசன் கடைகளைச் சோ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்தினாளிகள் என மொத்தம் 2,447 பயனாளிகள் பலனடைவா்.

நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் (பொ) தேவராஜ், ஒன்றிய செலாளா்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்பட கூட்டுறவு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களை... மேலும் பார்க்க

பணியின் போது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிபரணி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தொடங்கியது. இரண்டாம் நாளான வெள... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அனுப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் மகன் சபரி (12). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ச... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை 19 நீா்நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும்

திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி விநாயகா் சிலைகளை குறிப்பிட்ட நீா் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க