தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!
திருநங்கைகளுக்கு பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்றத்தூா் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி பொதுமக்கள், பலா் இலவச வீட்டு மனை பட்டா வழங்குமாறு அரசுக்கு பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என 39 பயனாளிகளுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆரம்பாக்கம் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அவா்களுக்கு இடங்களை அளவீடு செய்து கொடுக்கும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு கோரிக்கை வைத்து வரும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. ாமல் மற்ற பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு பட்டா வழங்குகின்றனா் என எதிா்ப்பு தெரிவித்து வருவாய்த் துறையிரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீஸாா் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து வைத்ததோடு அதிகாரிகள் நில அளவீடு செய்ய ஏற்பாடு செய்தனா்.