செய்திகள் :

திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் கவனத்துக்கு!

post image

மே மாதம் தொடங்கிவிட்டது. கோடை விடுமுறையும் தொடங்கியிருப்பதால், ஏராளமானோர் திருப்பதி திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிடுவார்கள்.

இதன் காரணமாக, திருமலை திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருப்பதாகவும், சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் 24 மணி நேரம் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலை திருப்பதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் 21 அறைகளும் நிரம்பி வழிவதாகவும், கோயில் வளாகத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு தரிசனம் தவிர்த்து, இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தது 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாயன்று, உள்ளூர் மக்களுக்கு சுவாமி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணியானது நாளை காலை 5 மணிக்குத் தொடங்க விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹதி கலையரங்களம், பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹால் ஆகியவற்றில் இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி தரிசனத்தில் மாற்றம்

கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் விஐபி தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 1 முதல் ஜூலை 15 வரை இது சோதனை முறையாக மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அதாவது, விஐபிக்கள் நேரடியாக கோயிலுக்கு வரும்போது மட்டுமே அவர்களுக்கு விஐபி தரிசனம் வழங்கப்படும். விஐபி தரிசன நேரம் காலை 6 மணியாக மாற்றப்படும். இது சரியாக செல்லும்பட்சத்தில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது விஐபிக்களின் பரிந்துரைக் கடிதத்துடன் வருபவர்களுக்கு காலை 8 மணிக்கும், விஐபிகளுக்கு 10 மணிக்கும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு சுவாமி தரிசனம் வழங்கப்படுகிறது.

சூப்பா்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் சுற்றிலேயே அவா்கள் நேருக்கு நோ் சந்திக்கின்றனா்.கடந்த ஜனவ... மேலும் பார்க்க

மல்லோா்காவை சாய்த்த ஜிரோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோா்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக கிறிஸ்டியன் ஸ்டுவானி 10-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்... மேலும் பார்க்க

மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை: சூரி

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.லார்க்... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் படத்தின் அப்டேட்!

டூரிஸ்ட் ஃபேமலி வெற்றியைத் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். நடிகராக அடுத்தடுத்த பல படங்களை தனது கைவசம் வைத்... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!

ஹிட் 3 படப்பிடிப்பில் நானிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது இருப்பினும் உடனடியாக அடுத்த காட்சிக்கு தயாரானது குறித்து இயக்குநர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி ... மேலும் பார்க்க