செய்திகள் :

திருப்பத்தூர்: சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை; அச்சத்தில் பயணிகள்! - சீரமைக்கப்படுமா?

post image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரியாலம் என்ற கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. இவ்விடத்தில் நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பயணியர் நிழற்குடை இருந்தும், அதைப் பயன்படுத்த முடியாமல் வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் வந்து பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்தப் பகுதியைச் சுற்றி தனியார்ப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, வங்கிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் , இவ்வளவு முக்கியமான இடத்தில் சிறிது நேரம் ஒதுங்கக்கூட ஒரு நல்ல நிலையில் பயணியர் நிழற்குடை இல்லையே!

உள்ளே நிற்பதற்கு அல்ல... அந்தப் பக்கம் சென்றாலே பெரிய அச்சம் ஏற்படுகிறது. எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படும் முன் விரைந்து நிழற்குடையைச் சீரமைத்துத் தர வேண்டும்" என்றனர்.

இது தொடர்பாகப் பொதுமக்களிடம் விசாரித்தபோது, ``இந்தச் சூழல் வெகுகாலமாக இப்படியேதான் உள்ளது. எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை, நாங்களும் எங்கள் தரப்பில் உயர் அதிகாரிகளுக்குப் பல முறை மனு கொடுத்தோம். ஆனால் எதுவும் மாறாமல் இதே சூழல் நிலவிக் காணப்படுகிறது. சனி, ஞாயிறு போன்ற நாள்களில் பக்கத்துக் கடைகள் பூட்டிய நிலையில் இருக்கும்.

அதனால் பேருந்து வரும் வரை அங்கு நின்றுகொண்டு காத்திருப்போம். மற்ற நாள்களில் நெடுஞ்சாலை ஓரமே வெட்ட வெளியில் நின்று கொண்டு இருப்போம். அண்மையில்கூட டூவீலர்‌‌ ஒன்று மாணவி மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. உள்ளேயும் நிற்க முடியாமல்... வெளியேவும் நிற்க முடியாமல் தினந்தோறும் அச்சத்தில் பயணம் மேற்கொள்கிறோம். போதாததற்கு இந்த வெயில் காலம் வேறு நெருங்கி விட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பழைய பயணியர் நிழற்குடையை அகற்றி, புதிய நவீன நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

திருப்பத்தூர்: பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம் - சிரமத்தில் மக்கள்!

நாட்றம்பள்ளி- திருப்பத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள்... மேலும் பார்க்க

பழனி: சுகாதார சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; சாக்கடைகளை மூடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள காந்தி ரோடு சாலையானது பல்வேறு வணிக நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பிரதான சாலையாகும். இதே சாலையில்தான் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகமும... மேலும் பார்க்க

SEBI Chief : 'அறிவிக்கப்பட்ட அடுத்த செபி தலைவர்!' - யார் இந்த துஹின் காந்தா பாண்டே?!

இன்றோடு தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச்சின் பணிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்த செபி தலைவராக தற்போது நிதி செயலாளராக இருக்கும் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவரின் பணிக... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா... தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவி நீலம் ஷிண்டே. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் இவருக்கு மார்பு ம... மேலும் பார்க்க

`Gold card' US visa: அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? -ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி! |Explained

`Gold card' US visa - இதோ வந்துவிட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு.ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ட்ரம்... மேலும் பார்க்க

Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத... மேலும் பார்க்க