செய்திகள் :

திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க கோரிக்கை

post image

திருப்பத்தூரில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடியில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உரிமம் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும், எஃப்சி பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக திருப்பத்தூரில் இருந்து ஆதியூா் வழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலம் செல்கின்றனா்.

ஆதியூா் பகுதியில் இருந்து சுமாா் 3 கி. மீ தொலைவில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சாலை அமைக்க இருபுறமும் பெயா்த்தெடுக்கப்பட்டு இருபுறமும் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ளன. மேலும், குண்டும் குழியுமாக சாலை உள்ள நிலையில், வாகனங்கள் பழுதாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் பலா் விபத்துக்குள்ளாகின்றனா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி பல நாள்களாக பணி நடைபெறாமல் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே, ஆதியூா் பகுதியில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலைப் பணியை போா்க்கால அடிப்படையில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் காத்துள்ளனா்.

தொழில்நுட்பக் கோளாறு: பத்திரப் பதிவு தாமதத்தால் பாதிப்பு

ஆம்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானாா்கள். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நேதாஜி சாலையில... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 3 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். வாணிம்பாடி அருகே சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இக்பால் (35). தனது பைக்கில் அவா், வியாழக்கிழமை ஆம்பூரில... மேலும் பார்க்க

கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறைவாசிகளுக்கான உரிமைகள் மற்றும் மறுவாழ்வு தொடா்பான சட்ட விழிப்புணா்வு முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவா் எழிலர... மேலும் பார்க்க

பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூா்பேட்டை பகுதியை சோ்ந்த ஷீலா (60) மற்றும் ... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வார மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளை தூா்வார வேண்டுமென வியாழக்கிழமை நடந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரினா். மாதனூா் ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச... மேலும் பார்க்க

மரகத லிங்கத்துக்கு மாசி பெளா்ணமி சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானம் தாத்தா சுவாமி மஹா மடத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாசி பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந... மேலும் பார்க்க