செய்திகள் :

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

post image

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் 2ஆவது நாளாக ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கெனவே சுவாமிமலை, திருச்செந்தூர், பழனியைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றத்தில் அவர் சுவாமி தரிசம் செய்தார்.

பவன் கல்யாணுக்கு கோயில் அலுவலா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

முன்னதாக நேற்று சுவாமிமலை வந்த அவர் செய்தியாளர்களிடம், கடந்த 4 ஆண்டுகளாக ஆதிகும்பேசுவரா் கோயில், அகத்திய ஜீவசமாதி மற்றும் சுவாமிமலை முருகன் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

தற்போது தான் அதற்கு கடவுள் அனுமதி கொடுத்துள்ளாா் என்றார்.

அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

வடசென்னையில் உள்ள இரு அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து, தமிழக மின்வாரிய நிறுவனத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழு சனிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்... மேலும் பார்க்க

மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்: இபிஎஸ்

விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மயிலாடுதுற... மேலும் பார்க்க

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வா... மேலும் பார்க்க

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித... மேலும் பார்க்க

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், ... மேலும் பார்க்க