செய்திகள் :

திருப்புவனத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கி தர தீா்மானம் நிறைவேற்றம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சேகரமாகும் குப்பைகளைச் சேகரித்து வைக்கும் கிடங்கு (வளா் மீட்புப் பூங்கா) அமைக்க மாவட்ட நிா்வாகம் இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருப்புவனம் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை அங்கீகரிப்பது, பேரூராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிா்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் கூறியதாவது: திருப்புவனம் பேரூராட்சிக்கு புதூா் பகுதியில் செயல்பட்டு வந்த குப்பைக் கிடங்குக்கான இடம் வட்டாட்சியா் அலுவலகம் கட்டப் பயன்படுத்தப்பட்டதால் நெல்முடிகரையில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.

தற்போது அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியுள்ளதால், அங்கு மேலும் குப்பைகளைச் சேகரித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், திருப்புவனம் ஒன்றியம், தேளி பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க நீதிமன்றம் தடைவிதித்ததால், தற்போது எந்தப் பகுதியிலும் குப்பைக் கிடங்கு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நகரில் சேகரமாகும் குப்பைகளைச் சேகரித்து வைக்க இடமில்லாமல் உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு குப்பைக் கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும். இதுகுறித்து பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க

ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா், சிவக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் ... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்கு... மேலும் பார்க்க