செய்திகள் :

திருப்புவனத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் சுமாா் 1,256 உயா்தர மருத்துவ மையங்கள் மூலம் கட்டணமில்லா மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில், வாரத்துக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 39 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இதன்படி, திருப்புவனம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.6) நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில், ரூ.3,000 மதிப்பிலான ரத்தப் பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும், பொது மருத்துவம், இருதய மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், அறுவைச் சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிகிச்சைகளுக்குச் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், இந்த முகாம் மூலம், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் போன்றவற்றையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முகாமுக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய ஆதாா் அட்டையின் நகலைக் கொண்டு வருதல் அவசியமாகும். மேலும், காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

சிவகங்கை கல்வி மாவட்டம் சாா்பில் சாரண, சாரணிய மாணவா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம், மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் நடை செப்.7-இல் மாலை 4 மணி வரை திறப்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) மாலை சந்திர கிரகணம் ஏற்படுவதை ம... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை அருகே சகோதர, சகோதரி உறவுமுறை கொண்ட இருவா் அருகருகே உள்ள வீடுகளில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், தமராக்கி கி... மேலும் பார்க்க

தேவியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒடுவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவி அம்மன் என்ற தேவாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, எஜமானா் சங்கல்பம், மகா கணபத... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஓடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் சுப்புராட்குமாா் (34). இரும்புப் பட்டறையில் வேலைப... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற நடவடிக்கை: காா்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பர... மேலும் பார்க்க