செய்திகள் :

``திருமணத்தில் அசைவ உணவு, மது கூடாது'' - ஆடம்பரத்துக்கு தடை விதித்த கிராம மக்கள் - எங்கு தெரியுமா?

post image

கிராமப் பெரியவர்கள் தீர்மானம்

திருமணம் என்றாலே இப்போது கோடிகளில் செலவு செய்வது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக பணக்காரக் குடும்பங்களில் திருமண விழா நடத்தும் போது, ஆடம்பரமாக கோடிகளைச் செலவழிப்பது உறுதியே.

ஆனால், இந்தச் செலவு பல குடும்பங்களை கடனாளிகளாக ஆக்குகிறது. திருமண விருந்துக்கே பல லட்சங்கள் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சின்ச்வால்கர்வாடி என்ற கிராமத்தில் ஆடம்பரத் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சின்ச்வால்கர்வாடி கிராம்

மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டம் சின்ச்வால்கர்வாடி கிராமத்தில் திருமணச் செலவுகளை கட்டுப்படுத்த கிராமப் பெரியவர்கள் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளனர்.

இதன்படி, திருமணத்தில் ஆடம்பர செலவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன் நடைபெறும் மஞ்சள் வைக்கும் சடங்கில் மது வழங்குவதும், அசைவ உணவு பரிமாறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுபவர்களின் திருமண விழாவில் கிராம மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, மும்பை போன்ற நகரங்களில் நடைபெறும் திருமணங்களிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணச் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிராமப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும் என்பதால், கிராம மக்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சஞ்சய் கபூர் ₹30,000 கோடி சொத்து: உயில் குறித்து பிரியா சச்சிதேவ், கரிஷ்மா பிள்ளைகள் வாக்குவாதம்

சஞ்சய் கபூர் விவாகரத்துடெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு லண்டனில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருந்தனர். அதில் ... மேலும் பார்க்க

சிவகாசி: '10 பைசா பிரியாணி' - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பி... மேலும் பார்க்க

The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவரம் என்ன?

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்க... மேலும் பார்க்க

Nano Banana: இணையத்தில் வைரலாகும் ”நானோ பனானா” ட்ரெண்ட் - பின்னணி என்ன?

ஏஐ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதன் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி நொடிபொழுதில் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.தற்போது, ‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக... மேலும் பார்க்க

Dosa: தோசை மீதான காதலால் கோடிகளில் லாபம் ஈட்டும் தம்பதியினர்; ஓர் அடடே ஸ்டோரி!

அதிக சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு தோசை மீதான காதலால் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.அகில் ஐயர் மற்றும் ஸ்ரேயா நாயர் என்ற தம்பதியினர் புதுமண தம்பதிகளாக மும்பையில் தரை ... மேலும் பார்க்க

மரத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்ட நபர்; மதிப்பு ரூ.11,000 என தெரிந்ததால் ரயில்வே அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மற்றும் நாந்தேட் இடையேயான ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது யவத்மால் மாவட்டத்தில் உள்ள கார்ஷி என்ற கிராமத்தில் உள்ள கேசவ் ஷிண்டே என்ற விவசாயியின்... மேலும் பார்க்க