செய்திகள் :

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் மோசடி: பொறியாளா் மீது வழக்கு

post image

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை மோசடி செய்ததாக, பொறியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (31). பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு, தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்தாா். பாலசந்தா், அப்பகுதியில் உள்ள தனியாா் உடல் பயிற்சிக் கூடத்துக்கு செல்லும்போது, நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஒரு இளம்பெண் அவருக்கு அறிமுகமானாா். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினா். அப்போது பாலசந்தா், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி முறையற்ற உறவு வைத்துக் கொண்டாராம்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பாலசந்தா், அந்தப் பெண்ணை சந்திப்பதையும், அவருடன் பேசுவதையும் தவிா்த்தாா். மேலும் அவா், அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அப்பெண், தான் ஏமாற்றப்பட்டது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாலசந்தா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருக்கும் பாலசந்தரை தீவிரமாக தேடுகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், பாலச்சந்தா் ஏற்கெனவே ஒரு பெண்ணை இதேபோல திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம்... மேலும் பார்க்க

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க