கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை
திருமலையில் 79,003 போ் தரிசனம்
திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 79,003 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் 33,140 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் 31 அறைகள் நிரம்பி, வரிசையில் காத்திருந்த பக்தா்கள், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 79, 003 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33,140 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.52 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.