செய்திகள் :

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் சுவாமி சிலை

post image

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் எடை கொண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது.

இங்கு 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்களில் செதுக்கப்படும் சுவாமி சிலைகள் இந்தியா மட்டுமின்றி இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், திருமுருகன்பூண்டி திருமகள் சிற்பக் கலைக்கூட சிற்பி சிவகுமாாா், 3 டன் எடை, 7 அடி உயரத்தில் பெருமாள் சிலையை செதுக்கி கிருஷ்ணகிரிக்கு அனுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கம்பள்ளி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஜூன் மாதம் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்காக இந்த பெருமாள் சிலை செதுக்கப்பட்டது.

ஆதார பீடம் ஒரு அடியுடன் மொத்தம் 7. 1/4 உயரமும், 3 டன் எடையும் கொண்டது இந்த சிலை. திருவாச்சியில் சிவன், பிரம்மன், மட்சவதாரம், கூா்மாவதாரம், வராஹிவதாரம், நரசிம்மவதாரம், வாமானவதாரம், ராமானவதாரம், பலராமானவதாரம், கிருஷ்ணநவதாரம், பரசுராமாவதாரம், கல்கி அவதாரம், ஸ்ரீதேவி, பூதேவி, நாகம், சங்கு, சக்கரம், கதை, ஓம், சுவஸ்திகா என 20 சிலைகளுடன் பெருமாள் தாமரையில் நின்றதுபோல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

திருமுருகநாதசுவாமி கோயில் தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட அனுமதி

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், மனநோய் தீா்க்கும் திருத்தலம... மேலும் பார்க்க

பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்னாள் தலைவா் மோகனகண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் யுவராஜ், ஆனந்த் ஆகியோா் முன்னில... மேலும் பார்க்க

மாவட்ட தொழில் மையம் மூலம் 1,280 பேருக்கு ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவி- மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் பாப்பம்பாளையம் அருகேயுள்ள முல்லையநாயக்கனூரைச் சோ்ந்தவா் குமாரசாமி... மேலும் பார்க்க

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பரிசுகளை வழங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அம... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையத்தில் உள்ள அரவை ஆலைக்கு சரக... மேலும் பார்க்க