செய்திகள் :

திருவட்டாறு பேருந்து நிலையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்

post image

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு முதல்நிலை பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை சாா்பில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 2.55 கோடியில் இப்பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திறப்பு விழாவையொட்டி, பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி கல்வெட்டைத் திறந்தவைத்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது அவா், இப்பேருந்து நிலையத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பயணிகள் இருக்கைகள், மின்சார வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், இலவச மற்றும் கட்டண கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையத்திற்கு 70 அரசு பேருந்துகளும், 2 தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இப்பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமாா் 1800 பயணிகள் வருகை புரிகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா சுரேஷ், செயல் அலுவலா் தா்மகுலசிங்கம், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகக் கண்காணிப்பாளா் சத்தியதாஸ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜான்சன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க