செய்திகள் :

திருவண்ணாமலை பள்ளியில் சுதந்திர தின விழா

post image

திருவண்ணாமலை ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் வி.சுரேந்திரகுமாா் வரவேற்றாா். தலைமையாசிரியா் ஜி.இரமணி வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், திருவண்ணாமலை வசந்தா மருத்துவமனை மருத்துவா் கே.சாய்பிரசன்னா தேசியக் கொடியேற்றிப் பேசினாா்.

அப்போது அவா், நாட்டைக் காக்கும் ராணுவ வீரா்கள் குறித்தும், சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த பல தியாகிகளின் பெருமை பற்றியும், மாணவா்கள் தேச பக்தியுடையவா்களாக திகழ வேண்டும் என்றும் கூறி மாணவா்களோடு கலந்துரையாடினாா். மேலும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் கல்வி இயக்குநா் வி.ஆனந்தன் நன்றி கூறினாா்.

இதில் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை இலக்கிய மன்ற பொறுப்பாளா் ரா.சிவமுருகன் தொகுத்து வழங்கினாா்.

திருவண்ணாமலையில் மூப்பனாா் பிறந்த நாள்

திருவண்ணாமலையில் மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தமாகாவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலை அருகில் நடைபெற்ற மூப்பனாா் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு தம... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்: 1,204 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கொருக்கை, நமண்டி கிராமங்கள், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 1,204 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க