செய்திகள் :

திருவண்ணாமலை : `பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்; மே 15 வரை அவகாசம்’ - ஆட்சியர் எச்சரிக்கை

post image

ன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தினந்தோறும் ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். வட இந்தியர்கள், வெளிநாட்டவர்களின் வருகை கணிசமாக இருந்தாலும், தெலுங்கு மொழி பேசக்கூடிய பக்தர்கள் தான் திருப்பதிக்கு அடுத்து திருவண்ணாமலைக்கு அதிகம் வருகின்றனர். இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயிலிலும் முடி காணிக்கை செலுத்துமிடம் தொடங்கி, பல இடங்களில் தெலுங்கு மொழியில் தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாற்று மொழிகளில் கோயில் அறிவிப்பு பலகைகள்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையே தெலுங்கு மொழியில் பதாகை வைத்திருக்கிறது. வியாபாரத் திட்டத்துடனும் அண்டை மாநிலத்தவர்கள் திருவண்ணாமலை நகரிலும், கிரிவலப் பாதையிலும் குழுமியிருக்கின்றனர். தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் எனத் திரும்பிய பக்கமெல்லாமல், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என மாற்று மொழிகளின் தகவல் பலகைகளே கண்களுக்கு புலப்படுகின்றன. ஆனால், அத்தி பூத்தாற்போல தமிழ் பெயர்ப் பலகைகளைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில்தான் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதிரடியாக ஓர் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக, ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். மேலும், பெயர்ப் பலகையில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரினை பெரிய அளவிலான தமிழ் எழுத்துகளில் குறிப்பிட வேண்டும்.

திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ்

ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தமிழ் எழுத்துகளை விட சிறிய அளவிலான எழுத்துகளில் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். மே 15-க்குள் 100 சதவிகிதம் தமிழ் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மே 15 வரை கால அவகாசமும் அளிக்கப்படுகிறது. அதன் பிறகும் தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு" - உதயநிதி அறிவிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி முடித்திருக்கிறது. முன்னதாக, இத்தொடருக்கான அறிவிப்பில், சாம்பியன் பட்டம் வெல்... மேலும் பார்க்க

Modi: `காங்கிரஸை விட அதிகமான நிதியை தமிழ்நாட்டிற்கு தந்திருக்கிறோம்' - பிரதமர் மோடி உரை

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசா... மேலும் பார்க்க

ராஜபாளையம்: இரண்டு நாளில் 80 பேரைக் கடித்த தெருநாய்கள்- பொதுமக்கள் அச்சம்

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிகிச்சைக்கு வந்தவர்கள்எனவே, ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்... மேலும் பார்க்க

Modi TN Visit: திறந்துவைத்து, பச்சைக்கொடி அசைத்த பிரதமர் மோடி; பாம்பன் பாலத்தைக் கடந்து சென்ற ரயில்!

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். சரிய... மேலும் பார்க்க

Waqf: `முஸ்லிம்களை அடுத்து கிருஸ்த்துவர்களை குறிவைக்கிறது பாஜக...' - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரச... மேலும் பார்க்க

Waqf: ஒப்புதல் வழங்கிய முர்மு; நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்த மசோதா; முக்கிய திருத்தங்கள் இவைதான்!

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை, 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருந்தது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக ... மேலும் பார்க்க