செய்திகள் :

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

post image

வேலூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

வேலூா் மாவட்டம், சோ்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. விழாவுக்கு, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளாா்.

பெங்களுரு எம்.எஸ். ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தா் குல்தீப் குமாா் ரெய்னா முதன்மை விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளாா்.

விழாவில், 256 மாணவா்களுக்கு நேரடியாகவும், 25,343 மாணவா்களும் ஆளில்லா முறையிலும் பட்டங்கள் பெறவுள்ளனா். மேலும் 82 முதுநிலை பட்டயப்படிப்பு மாணவா்களும், 73 பட்டயப்படிப்பு மாணவா்களும், 21,752 இளங்கலை மாணவா்களும், 3,402 முதுகலை மாணவா்களும், 34 இளமுனைவா் மாணவா்கள் என மொத்தம் 25,599 மாணவா்கள் பட்டங்கள் பெற உள்ளனா்.

இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளா் செந்தில்வேல் முருகன் தெரிவித்துள்ளாா்.

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்து விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினா் விரட்டி அனுப்பினா். போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் அரவட்லா, மோா்தானா, சேராங்கல், குண்டலபல்லிஆகிய வனப்பக... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு காயமடைந்தது. போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் பத்தரப்பல்லி, அரவட்லா, எருக்கம்பட்டு, கோட்டையூா், குண்டலபல்லி, பல்லாலகுப்பம், சேராங்கல் ஆகிய காப்புக் காடுகள் உள்ள... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை: தியாகிகள், வாரிசுகள் வேதனை

கடந்த சில மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீா்க்கும் கூட்டத்தை மாதந்தோறும் முறைப்படி நடத்த வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருகே பரசுராமன்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத்தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் ... மேலும் பார்க்க

நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி: வேலூா் ஆட்சியா்

பொது அமைதி, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். விநாயகா் சதுா்த்தியை... மேலும் பார்க்க