செய்திகள் :

திருவில்லிபுதூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் யார்? பொதுக்கூட்ட மேடையில் அறிவித்த சீமான்

post image

தேனி பங்களா மேட்டில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதழ் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது, “வட இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இங்கு ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது. வட இந்திய வாக்காளர்கள் முழுவதுமே பாஜகவின் வாக்காளர்கள்தான்.

கோவை தெற்கில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாங்கிய 20000 வாக்குகள் வட இந்தியர்களின் வாக்குதான். பாஜக ஆட்சியிலிருந்து வந்ததும் அதிகமான வட இந்தியர்கள் இங்கு வேலைக்கு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் திருவில்லிபுதூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை கரிகால் பாண்டியன்

இட ஒதுக்கீடு விஷயத்தில் உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை. ஆனாலும் உள் இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டார்கள் இப்போது அதில் முன்னுரிமை என்பதை எதிர்க்கிறோம். தேவேந்திர குல வேளாளர்கள் விவசாய குடிகள் அதனால் தான் அவர்களை வேளாளர்கள் என அழைக்கின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல.

தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கச் சொல்லி மத்திய அரசு மூன்று முறை சொல்லியிருக்கிறது. ஆனால் மாநில அரசு இன்னமும் நீக்கவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

திருவில்லிபுத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கரிகால் பாண்டியன் போட்டியிடுகிறார் என மேடையில் அறிவித்தார் சீமான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

IND vs PAK: "இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்தை விட முக்கியமா?" - BCCI-ஐ மீது மகா., எம்.பி தாக்கு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.அந்த எதிர்ப்புகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சமீ... மேலும் பார்க்க

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட... மேலும் பார்க்க

Shashi Tharoor: "என் சொந்தக் கட்சியின் தலைவர்..." - ராகுல் காந்தியுடனான முரண்பாடு குறித்து விளக்கம்

"இந்தியா ஒரு இறந்த பொருளாதாரம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதும், அதை ஆமோதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் ராகுல் காந்தியின் பார்வைக்கு மாறாக... மேலும் பார்க்க

பாஜக: "எங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து வருவார்கள்" - வானதி சீனிவாசன் உறுதி

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “கோவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே, விமான போக்குவரத்து, குறு சிறு தொழில் துறை மத்திய அம... மேலும் பார்க்க

"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளித்த ஜெயக்குமார்

தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றான. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் ஆதிமுகவினர் சிலருக்கே விருப்பம் இல்லை எனக் கூறப்பட்டுவந்தது.அந்த வகையில் அதிம... மேலும் பார்க்க