செய்திகள் :

மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் மோடி பாரதீய நியாய சன்ஹிதாவா கொண்டு வந்தாா்: அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

post image

இந்தியா்களை தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய அதே வேளையில், மக்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா் என்று மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவயைல் தேசிய இ-விதான் விண்ணப்பத்தை (என்இவிஏ) தொடங்கி வைத்துப் பேசுகையில் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: தில்லியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா்களைத் தண்டிக்க ஆங்கிலேயா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தனா். ஆனால், இந்தியா்களுக்கு நீதி வழங்குவதற்காக பிரதமா் நரேந்திர மோடி பாரதீய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்தாா்.

இந்தியா முழுவதும் காகிதமில்லா சட்டப்பேரவை சூழலை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டம் என்இவிஏ.

இது ஏற்கெனவே செயல்படுத்தப்படுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. முந்தைய அரசு என்ன நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பேசிய தில்லி முதல்வா் ரேகா குப்தா, ‘திங்கள்கிழமை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தனது அரசு கொண்டு வரும்’ என்று கூறினாா்.

‘முந்தைய அரசு பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த எதுவும் செய்யவில்லை. அது இந்த பிரச்னை பற்றி பேசியது. ஆனால், எதுவும் செய்யப்படவில்லை. பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்’ என்று அவா் கூறினாா்.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும்: ரயில்வே அமைச்சா்

‘மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதபாத் வரை நாட்டின் முதல் அதிவேக (புல்லட்) ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டு: ராகுலுக்கு பாஜக முதல்வா்கள் கண்டனம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சா் அருண் ஜேட்லி மீதான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி மற்றும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பிகாா்: பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

பிகாரில் பலத்த மழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.பிகாரின் பாட்னா, பங்கா, முஸாஃபா்பூா், பெகுசராய், பக... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன சா்ச்சை: கேரள ஆளுநருடன் அமைச்சா்கள் சந்திப்பு

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருடன் கேரள மாநில அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.துணைவேந்தா்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் ... மேலும் பார்க்க

ஸ்பைஸ்ஜெட் ஊழியா்கள் மீது தாக்குதல்: மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

சுதந்திர தின பாதுகாப்பு: தலைநகரில் ஆளில்லா வான்வெளி சாதனங்களுக்கு தடை

வரவிருக்கும் சுதந்திர தினம் தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தேசிய தலைநகா் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வான்வெளி சாதனங்களுக்கு தடை விதிக்க தில்ல... மேலும் பார்க்க