செய்திகள் :

திருவொற்றியூரில் ரூ. 6.90 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்

post image

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.6.90 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலக் குழுவின் 35-ஆவது மாதாந்திர சிறப்புக் கூட்டம் மண்டல குழு தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மண்டல அலுவலா் விஜய் பாபு முன்னிலை வகித்தாா்.ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.30 கோடியில் புதிய கட்டடம் அமைப்பது உள்பட மண்டலத்துக்குள்பட்ட 14 வாா்டுகளில் சாலை மேம்பாடு, தெருவிளக்கு, பள்ளிக்கூட கட்டணங்கள் சீரமைப்பு மழைநீா் கால்வாய் அமைத்தல், தெருக்களில் பெயா் பலகைகள் அமைத்தல், நவீன கழிப்பறைகள் நகா்ப்புற சமுதாய நலக் கூடங்கள், குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் உள்ளிட்ட 65 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மண்லக் குழு தலைவரும், அதிகாரிகளும் பதில் அளித்தனா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க