Thug Life: "இந்தச் சமயத்தில் கன்னட மொழி குறித்துப் பேசுவது தேவையில்லாதது" - இயக்...
திரைப்பட உதவி இயக்குநா் கடத்தப்பட்ட வழக்கு: மேலும் இருவா் கைது
திரைப்பட உதவி இயக்குநரை காரில் கடத்தி மிரட்டிய வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுசீந்திரன். திரைப்பட இயக்குநரான இவரிடம், உதவி இயக்குநராக பணியாற்றி வரும் ராஜகுமரனை மே 29 முதல் காணவில்லை என அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சுசீந்திரன் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜகுமரனை காரில் கடத்திச் சென்ற சைதாப்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் (33), காா்த்திகேயன் (25), லலித் ஆதித்யா (21), திவாகா் (21), அகஸ்டின் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்திருந்தனா்.
இந்நிலையில், இதில் தொடா்புடைய பெசன்ட் நகரைச் சோ்ந்த அந்தோணி (39), மயிலாப்பூரைச் சோ்ந்த டேனியல் ராஜ் (44) ஆகியோரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து ரூ. 58,000, இருசக்கர வாகனம், 4 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.