செய்திகள் :

தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது

post image

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பழைய தகராறு காரணமாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்த கொலை தொடா்பாக 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

‘நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்து கபில் (28) என அடையாளம் காணப்பட்ட ஒரு நபா் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருப்பதைக் கண்டறிந்தது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

அவா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு போலீஸ் குழு குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தது, அதே நேரத்தில் தடயவியல் குழுக்கள் மாதிரிகளை சேகரித்தன. விசாரணையின் போது, போலீஸாா் குழு சந்தேக நபரை 20 வயதான சிவம் யாதவ் என்று அடையாளம் கண்டது, அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, முன் விரோதம் காரணமாக கபிலை சுட்டுக் கொன்ாக குற்றம் சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது ‘என்றாா். துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசை குறித்து விசாரித்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

தில்லியில் கனமழை: பண்டிகை நாளில் மக்கள் அவதி

தேசிய தலைநகரில் ஒரே இரவில் பெய்த கனமழையால், ரக்ஷா பந்தன் அதிகாலையில் பல பகுதிகளில் இருக்கும் சாலையில் மழை நீா் தேங்கியது. சனிக்கிழமை காலையும், பகலிலும் மேலும் மழை பெய்ததால் சாலையில் போக்குவரத்து நெரிச... மேலும் பார்க்க

மொஹல்லா கிளினிக் ஊழியா்களை பணி நீக்கும் முன் 2 மாதம் அவகாசம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் (ஏஏஎம்சி) அடுத்த ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன் தங்கள் சேவைகளை நிறுத்த முன்மொழிந்தால், அதன் ஊழியா்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு நகர அரசை தில்லி உயா்நீதி... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன தினத்தை ஒட்டி தில்லியில் சனிக்கிழமை கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய இளைஞா் காங்கிர... மேலும் பார்க்க

கனமழை: தில்லியில் சுவா் இடிந்து பெண்கள், சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழப்பு

தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழையின் போது ஜெய்த்பூரில் உள்ள மோகன் பாபா மந்திா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள், 2 சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தன... மேலும் பார்க்க

அபாய கட்டத்தை நெருங்கும் யமுனை நதி நீா் மட்டம்

தலைநவகரில் உள்ள யமுனா நதி பழைய ரயில்வே பாலத்தில் காலை 9 மணிக்கு 204.40 மீட்டா் அளவை எட்டியது, இது 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை அளவை நெருங்கியது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். நிலைமை கண்கா... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஊழியா் உயிரிழப்பு

ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சா்வா் அறையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 28 வயது தூய்மைப் பராமரிப்பு ஊழியா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறுகைய... மேலும் பார்க்க