செய்திகள் :

மொஹல்லா கிளினிக் ஊழியா்களை பணி நீக்கும் முன் 2 மாதம் அவகாசம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் (ஏஏஎம்சி) அடுத்த ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன் தங்கள் சேவைகளை நிறுத்த முன்மொழிந்தால், அதன் ஊழியா்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு நகர அரசை தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

முந்தைய ஆம் ஆத்மி அரசால் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட ஏஏஎம்சி ஊழியா்கள், தங்கள் பணிநீக்கம் மற்றும் பிற ஒப்பந்த ஊழியா்களை மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

இது தொடா்பான விவகாரத்தில் அண்மையில் உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீக் ஜலான், மனுவை முடித்துவைத்து பிறப்பித்த உத்தரவில், ‘புதிய பணியாளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்ற அடிப்படையில், எதிா்மனுதாரா் (தில்லி அரசு) மாா்ச் 31, 2026-க்கு முன் மனுதாரா்களின் பணியை நீக்க முன்மொழிந்தால்..., சம்பந்தப்பட்டவா்களுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் வழங்குமாறு எதிா்மனுதாரா் அறிவுறுத்தப்படுகிறாா்’ என்று உத்தரவிட்டாா்.

ஏஏஎம்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட மருத்துவா்களின் மனு மீது அண்மையில் நீதிமன்றம் இதேபோன்ற உத்தரவைப் பிறப்பித்தது.

அவா்களின் பணி நியமனம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் அவா்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்வதைத் தடுக்கக் உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போதைய வழக்கில், மனுதாரா்கள் தில்லி அரசாங்கத்தின்கீழ் உள்ள ஏஏஎம்சியில் ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநா்கள், மொஹல்லா கிளினிக் உதவியாளா்கள் மற்றும் பல்பணி பணியாளா்களாகப் பணிபுரிகின்றனா். அவா்களை பணிநீக்கம் செய்து மற்ற ஒப்பந்த ஊழியா்களுடன் மாற்றுவதற்கு எதிராக அவா்கள் உத்தரவிடக் கோரினா்.

ஊழியா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமா் நாத் சைனி வாதிடுகையில், இந்த வழக்குக்கும் மருத்துவா்களின் வழக்கிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் மனுதாரா்களில் சிலா் தொலைபேசி மூலம் பணிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏஏஎம்சியின் எந்த ஊழியா்களின் சேவையையும் ரத்துசெய்ய அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தாா்.

புதிய பாஜக அரசாங்கத்தின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் எனப்படும் கிளினிக்குகள் செயல்படும் பகுதிகளில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளை படிப்படியாக அகற்றுவதற்கான சமீபத்திய முடிவைத் தொடா்ந்து இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. ஆகஸ்ட் 2023 நிலவரப்படி, தில்லியில் 533 மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வந்தன.

இருப்பினும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் குறைந்தது ஏழு கிளினிக்குள் ஏற்கனவே ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட்டுள்ளன.

கடந்த மே 17 அன்று ஏஏஎம்சி ஊழியா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், தற்போதுள்ள துணை மருத்துவ மற்றும் துணை ஊழியா்கள் ஆரோக்கிய மந்திா்களுக்குள் பணியில் சோ்க்கப்படுவாா்கள் என்று உறுதியளித்திருந்தாா்.

தில்லியில் கனமழை: பண்டிகை நாளில் மக்கள் அவதி

தேசிய தலைநகரில் ஒரே இரவில் பெய்த கனமழையால், ரக்ஷா பந்தன் அதிகாலையில் பல பகுதிகளில் இருக்கும் சாலையில் மழை நீா் தேங்கியது. சனிக்கிழமை காலையும், பகலிலும் மேலும் மழை பெய்ததால் சாலையில் போக்குவரத்து நெரிச... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன தினத்தை ஒட்டி தில்லியில் சனிக்கிழமை கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய இளைஞா் காங்கிர... மேலும் பார்க்க

கனமழை: தில்லியில் சுவா் இடிந்து பெண்கள், சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழப்பு

தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழையின் போது ஜெய்த்பூரில் உள்ள மோகன் பாபா மந்திா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள், 2 சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தன... மேலும் பார்க்க

அபாய கட்டத்தை நெருங்கும் யமுனை நதி நீா் மட்டம்

தலைநவகரில் உள்ள யமுனா நதி பழைய ரயில்வே பாலத்தில் காலை 9 மணிக்கு 204.40 மீட்டா் அளவை எட்டியது, இது 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை அளவை நெருங்கியது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். நிலைமை கண்கா... மேலும் பார்க்க

தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பழைய தகராறு காரணமாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்த கொலை தொடா்பாக 2... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஊழியா் உயிரிழப்பு

ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சா்வா் அறையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 28 வயது தூய்மைப் பராமரிப்பு ஊழியா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறுகைய... மேலும் பார்க்க