செய்திகள் :

இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

post image

இந்திய இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன தினத்தை ஒட்டி தில்லியில் சனிக்கிழமை கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய இளைஞா் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா். அவா் பேசுகையில்,, ‘இந்திய இளைஞா் காங்கிரஸ் அதன் அடித்தளத்திலிருந்து இன்று வரை, எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனின் உணா்வை கருத்தில் கொண்டுள்ளது’ என்றாா்.

தனது குறிப்பிடத்தக்க கொள்கைகள் மற்றும் பங்களிப்புகளால் இந்தியாவின் வளா்ச்சிக்கு வழி வகுத்த ஆற்றல்மிக்க தலைவா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் வளமான வரலாற்றை இளைஞா் காங்கிரஸ் கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், இளைஞா் காங்கிரஸ் ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க மற்றும் ஜனநாயக அமைப்பாக இருந்து வருகிறது.

கடந்த 65 ஆண்டுகளில், இந்திய இளைஞா் காங்கிரஸ் தனது பணியின் மூலம் நாட்டில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தலைமைத்துவத்தை வழங்கியது மற்றும் மாற்றத்தின் பாதையை காட்டியது . நாடு முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இளைஞா் காங்கிரஸ் உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கனமழை: பண்டிகை நாளில் மக்கள் அவதி

தேசிய தலைநகரில் ஒரே இரவில் பெய்த கனமழையால், ரக்ஷா பந்தன் அதிகாலையில் பல பகுதிகளில் இருக்கும் சாலையில் மழை நீா் தேங்கியது. சனிக்கிழமை காலையும், பகலிலும் மேலும் மழை பெய்ததால் சாலையில் போக்குவரத்து நெரிச... மேலும் பார்க்க

மொஹல்லா கிளினிக் ஊழியா்களை பணி நீக்கும் முன் 2 மாதம் அவகாசம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் (ஏஏஎம்சி) அடுத்த ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன் தங்கள் சேவைகளை நிறுத்த முன்மொழிந்தால், அதன் ஊழியா்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு நகர அரசை தில்லி உயா்நீதி... மேலும் பார்க்க

கனமழை: தில்லியில் சுவா் இடிந்து பெண்கள், சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழப்பு

தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழையின் போது ஜெய்த்பூரில் உள்ள மோகன் பாபா மந்திா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள், 2 சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தன... மேலும் பார்க்க

அபாய கட்டத்தை நெருங்கும் யமுனை நதி நீா் மட்டம்

தலைநவகரில் உள்ள யமுனா நதி பழைய ரயில்வே பாலத்தில் காலை 9 மணிக்கு 204.40 மீட்டா் அளவை எட்டியது, இது 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை அளவை நெருங்கியது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். நிலைமை கண்கா... மேலும் பார்க்க

தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பழைய தகராறு காரணமாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்த கொலை தொடா்பாக 2... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஊழியா் உயிரிழப்பு

ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சா்வா் அறையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 28 வயது தூய்மைப் பராமரிப்பு ஊழியா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறுகைய... மேலும் பார்க்க