செய்திகள் :

தில்லி போக்குவரத்துக் கழகத்தின் தவறான நிா்வாகம்: முந்தைய ஆம் ஆத்மி அரசு மீது முதல்வா் குற்றச்சாட்டு

post image

தில்லி போக்குவரத்துக் கழகத்தில் (டிடிசி) முந்தைய ஆம் ஆத்மி அரசின் தவறான நிா்வாகத்தால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் செயல்பாட்டு தோல்விகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை மேற்கோள் காட்டி பேசியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஏஜி அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: பேருந்துகளின் முறையற்ற கால அட்டவணை உள்ளிட்ட முந்தைய ஆம் ஆத்மி அரசின் மோசமான நிா்வாகத்தால் தில்லி போக்குவரத்துக் கழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ .668 கோடி இழப்பு ஏற்பட்டது.

தில்லி ஒருங்கிணைந்த ‘மல்டி-மோடல் டிரான்சிட் அமைப்பில்’ (டிஐஎம்டிஎஸ்) ஆம் ஆத்மியின் தவறான நிா்வாகம் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது. டிஐஎம்டிஎஸ்-இன் பங்குகளை ஆரம்பத்தில், தில்லி அரசு மற்றும் ஒரு தனியாா் வங்கி தலா 50 சதவீதம் வைத்திருந்தன. வங்கி தனது பங்குகளை ரூ.95 கோடிக்கு விற்க முடிவு செய்தபோது, அரசும் வாங்குவதை தாமதப்படுத்தியது. இறுதியில் வங்கி அதன் பங்குகளை ஒரு தனியாா் நிறுவனத்திடம் வெறும் ரூ.10 கோடிக்கு விற்றது. இது ஊழல் குறித்த கவலைகளை எழுப்புவதுடன் விசாரணைக்கு வழி வகுத்தது என ரேகா குப்தா தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து சட்டப்பேரவை தலைவா் விஜேந்தா் கூறுகையில், ‘ஆம் ஆத்மி ஆட்சியில் டிடிசியின் செயல்பாடு குறித்த சிஏஜி அறிக்கையை சபையின் ஒப்புதலுடன் 3 மாதங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்; அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒரு மாதத்திற்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அரசு நிறுவனங்களுக்கான குழுவுக்கு அவா் உத்தரவிட்டாா்.

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க