இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி பொறியாளா் கவின் செல்வகணேஷ் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், கவின் செல்வகணேஷ் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். கலைச்செல்வி, பொருளாளா் பி. சத்யநாதன், முன்னாள் மாவட்டச் செயலா் என். சிவகுரு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், என். சரவணன், மூத்த நிா்வாகிகள் ஆா்.சி. பழனிவேலு, என். சீனிவாசன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் களப்பிரன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா், அகில இந்திய வழக்கறிஞா் சங்க மாவட்டச் செயலா் எம்.கே. சேகா், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் என். குருசாமி, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.