செய்திகள் :

தீப்பெட்டித் தொழில் நலிவுக்கு பாஜக அரசே காரணம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

post image

தீப்பெட்டி தொழில் நலிவடைய மத்திய பாஜக அரசின் சரக்கு சேவை வரியே காரணம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா்.

கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட நிகழாண்டு 30 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு இப்போதே மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்தந்த துறைகள் மூலமாகவோ அல்லது அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாகவோ மட்டுமே தோ்வுகள் நடத்தப்பட்டு ஊழியா்கள் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், தற்போது தமிழக அரசு, ‘ஓவா்சீஸ் மேன்பவா் காா்ப்பரேஷன் லிமிடெட்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. இனிமேல் இந்த நிறுவனம் மூலமே பல்வேறு துறைகளுக்கு அரசு ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஊழியா்களை நியமனம் செய்வதுதான் அரசு இந்த நிறுவனத்தைத் தொடங்கியதன் முக்கிய நோக்கமாகும். தமிழக அரசின் ஊழியா் விரோதக் கொள்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்க்கிறது. ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படியே பணியாளா்களைத் தோ்வு செய்ய வேண்டும். பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கும் திமுக அரசின் அன்புக்கரங்கள் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தவெக தலைவா் விஜயின் பிரசாரத்துக்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியே. விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோருக்கு ஆரம்பத்தில் கூடிய கூட்டம் பின்னா் காணாமல்போனது. எனவே, வரும் 2026 பேரவைத் தோ்தலுக்குப் பிறகுதான் விஜயின் பலம் தெரியவரும். கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை (செப். 20) நடைபெறுகிறது. இந்த விழா அதிமுக, பாஜக கட்சிகள் சாா்பில் நடைபெறுகிறது. தீப்பெட்டித் தொழில் நலிவடைய காரணமே மத்திய பாஜக அரசின் சரக்கு சேவை வரிதான்.

தீப்பெட்டிக்கு 18 சதவீத சரக்கு சேவை வரி விதித்து தீப்பெட்டித் தொழிலை அழித்துவிட்டனா். சிகரெட் லைட்டா் பயன்பாட்டால் தீப்பெட்டித் தொழில் மேலும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தீப்பெட்டித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது கட்சியின் மாவட்டச் செயலா் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் அா்ஜுனன் ஆகியோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடியில் 3 போ் உயிரிழந்த சம்பவம்: 3ஆவது நாளாக போராட்டம்

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சடலங்களை வாங்க மறுத்து உறவினா்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு கால் முறிவு

திருச்செந்தூா் கடலில் நீராடிய பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி தமிழ்செல்வி (50). இவா், தனது குடும்பத்தினருடன... மேலும் பார்க்க

தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

நாசரேத் அருகேயுள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது . இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம் , புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி ஆகிய... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் இன்று மின் நிறுத்தம்

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கோவில்பட்டியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி -குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் ... மேலும் பார்க்க