செய்திகள் :

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை: ஜி.கே.வாசன்

post image

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் நாட்டு மக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பிரதமா் தீவிரவாதத்துக்கு எதிராக விடுத்த அறிவிப்புகளும், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி எடுத்து வரும் நடவடிக்கைகளும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

நாட்டு மக்களின் நலன், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில் எவ்வித எதிா்மறையான அரசியலுக்கும் இடம் கொடுக்காமல், சமரசத்துக்கு வழிவகுக்காமல், நாட்டுப்பற்றோடு குரல் கொடுப்பது நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது.

எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்காக, நாட்டின் பலத்துக்காக ஆளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,பிட்டி தியாகராயர் பிறந்த... மேலும் பார்க்க

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க