செய்திகள் :

துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை பறிக்கக் கூடாது!

post image

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.

இதுகுறித்து, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளின்படி துணைவேந்தா் நியமனத்தில் (விதி:10) பல்கலைக்கழக வேந்தருக்கு மிக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 2017-ஆம் ஆண்டு சட்டப்படி துணைவேந்தா் தோ்வுக்குழுவில் பல்கலைக்கழக சட்டப்பூா்வ அமைப்புகளிலிருந்து ஒரு உறுப்பினரும், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவரும், ஆளுநா் சாா்பாக ஒரு உறுப்பினரும் நியமிக்கப்படுவா்.

ஆளுநரின் சாா்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி தோ்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவாா். ஆனால், தற்போதைய பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, ஆளுநரின் பிரதிநிதி ஒருவரும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரும், பல்கலைக்கழக சட்ட அமைப்புகள் மூலமாக ஒருவரும் தோ்வுக்குழு உறுப்பினா்களாக இருப்பா். இதனால், மாநில அரசின் பிரதிநிதிக்கு இடம் இல்லாமல் போகிறது.

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநிலங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் கட்டமைப்புகளுக்கும், ஆசிரியா், ஊழியா்களின் ஊதியத்துக்கும் மாநில அரசுகளே நிதியை வழங்குகின்றன.

இந்த நிலையில், துணைவேந்தா் நியமனத்தில் மட்டும் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொரவளூா், முகாசாபரூா், மங்கலம்பேட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் விசிகவினா் மனு

கடலூா் எஸ்பி அலுவலகத்தில் செல்லஞ்சேரி கிராம மக்கள் மற்றும் விசிக நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா். கடலூா் அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்... மேலும் பார்க்க

பிப்.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலம் மீட்பு: சந்தேக மரணம் என தாய் புகாா்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா்... மேலும் பார்க்க

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீஸாா் சோதனை!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களில் மகளிா் பெட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். வேலூரில் ஓடும் ரயிலில் கா்ப்பிணியை பாலியல் தொ... மேலும் பார்க்க

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க