செய்திகள் :

துணை முதல்வர் நிகழ்ச்சியில் பறந்து வந்த டிரோன்! 2 பேர் கைது!

post image

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நிகழ்ச்சியில் அனுமதியின்றி டிரோனை பறக்கவிட்ட 2 பேர் இன்று (பிப்.14) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாசிக் மாவட்டத்தின் ஹிவாலி பகுதியிலுள்ள ஜில்லா பரிஷாத் பள்ளிக்கூடத்திற்கு அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வருகைத் தந்தார். அப்போது, பாதுகாப்புப் படையினரிடன் அனுமதியின்றி டிரோன் ஒன்று அங்கு பறந்ததுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த டிரோனை கீழே கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதனை இயக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், இதில் தொடர்புடைய புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளர் ஒருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் பலி! மருத்துவர்களின் அலட்சியத்தால் போராட்டம்?

இதுகுறித்து, அம்மாநில காவல் துறையினர் கூறியதாவது இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் சந்தேகப்படும்படியான எந்தவொரு நோக்கமும் இல்லையென்றும், துணை முதல்வர் நிகழ்ச்சியின் நல்ல புகைப்படங்களுக்காக மட்டுமே அவர்கள் டிரோனை பறக்கவிட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

நகைக்காக தலையணை வைத்து பெண் கொலை!

பென்னாகரம்: பெண்ணைத் தலையணை வைத்து கொலை செய்து, மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தாலி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தைவிட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை கொலைச் சம்பவம் தொடர்பாக தன்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 15) ரூ. 800 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 8060-க்கும், பவுனுக... மேலும் பார்க்க

நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? ப. சிதம்பரம் கேள்வி

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்கள... மேலும் பார்க்க

சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!

மகா கும்பமேளாவுக்கு சத்தீஸ்கரில் இருந்து பக்தர்கள் சென்ற கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். மேலும் பார்க்க

இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியின் குரலே,பா.ஜ.க.விற்கான டப்பிங்குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க