செய்திகள் :

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

post image

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.

துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால், ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த குடியிருப்பு, மிக முக்கியப் பகுதியில் அமைய வேண்டும், வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப விலை மாறுபடுமாம்.

துபை அறிவியல் பூங்கா அல்லது துபைலாண்ட் பகுதியில், ஒருவர் நடுத்தரமான வீடு வாங்க வேண்டும் என்றால் ரூ.1.8 கோடி முதல் ரூ.2.3 கோடி வரை இருக்கும் என்கிறது ஊடகத் தகவல்கள்.

அதுவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான துபை மரினா அல்லது ஜூமெய்ரா கடற்கரைக்கு அருகே வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆகும். அதுவும் நடுத்தரமான வீடுதான்.

சரி.. புர்ஜ் கலிஃபா அருகே ஒரு படுக்கை வசதிகொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.3.75 கோடியாகும். எனவே, வீடு அமைந்திருக்கும் பகுதி மற்றும் வீட்டில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப, வீட்டில் விலை தாறுமாறாக உயரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோல்டன் விசா

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா தொடர்பான விதிமுறைகளில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றம் நாட்டின் குடியிருப்புகளுக்கான நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நியமன அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தின் கீழ், இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு குடிமக்கள் 1,00,000 திர்ஹாம்கள் (சுமார் ரூ.23.3 லட்சம்) நிலையான தொகையை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் துபையில் வாழும் அனுமதியைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப... மேலும் பார்க்க

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க