செய்திகள் :

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

post image

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்கு துருக்கியில் 10 இடங்களில் பரவிய மிகப் பெரியளவிலான காட்டுத் தீயானது கட்டுப்படுத்தப்பட்டதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் யுமாக்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த விசாரணையில், துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்ததன் மூலம் தீ உருவாகியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேபோல், சிரியாவின் ஹடாய் மாகாணத்தின், டோர்டியோல் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 4) மதியம் முதல் காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இந்தத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வீசும் பலத்த காற்றினால் தீ மேலும் பல இடங்களுக்கு பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 920 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், லடாகியா மாகாணத்தில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த 11 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அந்நாட்டு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக சிரியாவின் இடைக்கால பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்துடன், சிரியாவில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த துருக்கி அரசு 2 தீயணைப்பு விமானங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

As wildfires spread across Turkey and Syria, firefighters from both countries are struggling to put out the flames on their borders.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர்நிறுத்தம்? ஹமாஸின் அறிவிப்பால் மத்தியஸ்தர்கள் மகிழ்ச்சி!

அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: ஹமாஸ் ‘ஆக்கபூா்வ’ பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த வரைவு திட்டத்திற்கு “நோ்மறையான” பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப... மேலும் பார்க்க

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: உக்ரைன்

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் ... மேலும் பார்க்க

துப்பாக்கி வன்முறை: இலங்கையில் 300 போ் கைது

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தவும், குற்றவியல் கும்பல்களை ஒடுக்கவும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், கொழும்பு வடக்கு புகா்ப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். இது க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - காஸா போர்நிறுத்தம்? ஹமாஸின் அறிவிப்பால் மத்தியஸ்தர்கள் மகிழ்ச்சி!

காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் ச... மேலும் பார்க்க