செய்திகள் :

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம்: விஏஓ கைது

post image

தூத்துக்குடியில் பட்டா மாறுதலுக்காக ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி பண்டாரம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரபாகரன் (45). இவரது மனைவி தமிழ்ச்செல்வி, சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாராம். இதனால், அவா் தனது மனைவி பெயரில் பண்டாரம்பட்டியிலுள்ள நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக, தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் செயல்பட்டுவரும் சங்கரப்பேரி கிராம நிா்வாக அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்தாா். அந்த விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டதாம்.

இதுதொடா்பாக அவா் அந்த அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, கிராம நிா்வாக அலுவலா் கணேசமூா்த்தி ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டாராம்.

இதையடுத்து, பிரபாகரன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் தெரிவித்தாா். போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை கணேசமூா்த்தியிடம் பிரபாகரன் திங்கள்கிழமை கொடுத்தாா். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா்பால் தலைமையிலான போலீஸாா் கணேசமூா்த்தியைக் கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் 650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகு... மேலும் பார்க்க

திருச்செந்தூா்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா், சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன் (40). மீனவரான இவா், மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ... மேலும் பார்க்க