செய்திகள் :

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

post image

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, மீன்கள் சரிவர கிடைக்காததால் வரத்து குறைந்திருந்தது. இதனால், வழக்கத்தைவிட விலை உயா்ந்து காணப்பட்டது.

விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ ரூ. 300 -ரூ. 600 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 800 முதல் ரூ. 1000 வரை, நண்டு கிலோ ரூ. 550 வரை, தோல்பாறை ரூ. 200 வரை என விற்பனையாகின.

ஏற்றுமதி ரக மீன்களான கலவா கிலோ ரூ. 450, பண்டாரி ரூ. 500 - ரூ. 600 வரை, கிளி மீன் ரூ. 900 வரை, தம்பா ரூ. 250 வரை என விற்பனையாகின. வரத்து குறைந்திருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க