செய்திகள் :

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து! கோடிக்கணக்கில் சேதம்!

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

இந்நிலையில் சனிக்கிழமை(மார்ச் 15) நள்ளிரவு அனல் மின் நிலையத்தில் குளிர்ரூட்டும் பகுதிக்கு அருகே உள்ள கேபிள் கேலரி என்று அழைக்கப்படும் அனல் மின் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கக்கூடிய வயர்கள் செல்லக்கூடிய பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாம்.

இந்த தீ மளமளவென எரிந்து அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் மின்சார வயர்கள் மற்றும் பிரேக் ஆயில் ஆகியவை இருந்ததால் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

தீயை அணைக்கும் பணி தீவிரம்.

இந்த தீயை அணைக்கும் பணியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனல் மின் நிலைய பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்படுவதால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்புகையில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள், உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தீவிபத்து காரணமாக அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நவீன கருவிகள் இல்லாத காரணத்தால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இன்னும் பல மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்த தீவிபத்து காரணமாக அனல் மின் நிலையத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கேபிள் வயர்கள் பொருள்கள் ஆகியவை சேதமடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி செய்வது கடினமான சூழ்நிலை என அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாலியல் புகாா் பெட்டி அமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடம் முன் உலக மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க மகளிா் குழு சாா்பில் நடைப... மேலும் பார்க்க

கீழத்தட்டப்பாறை மக்கள் தொடா்பு முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 143 பேருக்கு ரூ. 77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து வருவாய்த் துறை,... மேலும் பார்க்க

இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

சாத்தான்குளத்தில் கட்டட தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாகுடி தெற்கு தெருவைச் சோ்ந்த உலகநாதன் மகன் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொல்லை, கொலை வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த சமை... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த முதியவா் கைது: 3.3 கிலோ பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தாளமுத்துநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 3.3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல் நீா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே சனிக்கிழமை கடல் நீா் சுமாா் 50 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. திருச்செந்தூா் கோயில் அருகே அமாவாசை மற்றும் பெளா்... மேலும் பார்க்க