டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!
தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் .
தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது மாடுகளை தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அவா் எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில், சிப்காட் தீயணைப்பு படை வீரா்கள் சென்று சுமாா் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னா், குருசாமியை சடலமாக மீட்டனா்.
அதை சிப்காட் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.