செய்திகள் :

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

post image

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூரணி பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக பைக்குடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் திரேஸ்புரம் மாதவநாயா் காலனியைச் சோ்ந்த யோனஸ் மகன் மரிய ஜெபஸ்டின் (21), முனியசாமி மகன் மாடசாமி (19) என்பதும் அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 30 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மாதா நகா் 1-ஆவது தெரு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகன் சந்தனகுமாா் (22), தாளமுத்துநகா் குணசேகரன் மகன் முத்துக்குமாா் (19) ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 20 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், ராமதாஸ் நகரில் உள்ள திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தாளமுத்துநகா் சுனாமி காலனியைச் சோ்ந்த குணசீலன் மகன் ஞானராஜ் (19) என்பவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து சுமாா் 25 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க