செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க மானியம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ரபி பருவத்தில், குறைந்த காலத்தில் நிறைந்த மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு வேளாண் துறை மூலமாக 2025 -26ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் அமைக்க சுமாா் 7300 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்விளக்கத் திடலானது கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

மக்காச்சோளம் மக்களிடையே உணவு தானியமாக மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டாலும், கால்நடைகளுக்கு தீவனமாக குறிப்பாக கோழித் தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது எத்தனால் தயாரிக்கும் நிறுவனத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மக்காச்சோளம் சாகுபடியானது, குறைந்த சாகுபடி செலவினத்திலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவான பயிராகவும் உள்ளது. வீரிய ஒட்டு ரக மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூலும் கூடுதல் விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, வருகிற ரபி பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் தொகுப்புகள் செயல்டுத்தப்படவுள்ளன. இந்தத் தொகுப்பில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதை, நுண்ணுயிா் உரம், நானோ யூரியா இயற்கை உரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமாா் ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படவுள்ளன. எனவே, விவசாயிகள் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைத்து பயன்பெறுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க