செய்திகள் :

தூத்துக்குடி: 70 வழக்குகளில் 5 மாவட்ட போலீஸால் தேடப்பட்ட முகமூடிக் கொள்ளையர்; சிக்கியது எப்படி?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் ஒருவர் வேகமாகச் சென்றார். அவரை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால், அவர் நிற்காமல் வேகமாகச் சென்றார்.

சந்தேகமடைந்த போலீஸார் அவரைப் பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றவரைத் துப்பாக்க்கி முனையில் பிடித்தனர்.

பின்னர் அவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்திர குமார்
கைது செய்யப்பட்ட சந்திர குமார்

அவர், நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கீழகாடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரபல முகமூடிக் கொள்ளையர் என்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். அப்போது அவர்கள், “கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் பிடிபட்ட சந்திரகுமார் மீது கோவில்பட்டி, எட்டயபுரம், எப்போதும்வென்றான், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், ஆலங்குளம், தக்கலை, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

வீடுகள், கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு எனப் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸார் சந்திரகுமாரைத் தேடி வந்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

அவரிடமிருந்து 3 பைக்குகள், அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர் மீது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொள்ளைச் சம்பவத்தை முடித்த பிறகு களக்காடு மலைப்பகுதியில் பதுங்கிக் கொள்வார்.

கொள்ளையில் ஈடுபடும் போது சி.சி.டி.வி கேமராவில் அவரது முகம் தெரியாமல் இருக்க முகமூடி, கையுறை அணிந்து கொள்வார்.

இதனால் அவரைப் பிடிப்பதில் போலீஸாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. தற்போது வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டார்” என்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க