செய்திகள் :

தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் ‘பிளீச்சிங் பவுடா்’ தரம் ஆய்வு: மேயா்

post image

சென்னை மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணிக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபுவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் ஆா்.பிரியா கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினாா்.

மேயா் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், அப்பகுதியில் குப்பையை தூய்மைப் பணியாளா்கள் அகற்றியதுடன், துா்நாற்றம் வீசியதால் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு துா்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

இதைத்தொடா்ந்து அங்கிருந்த நபா், தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடா் தரமற்றவையாக உள்ளதாகவும், சில இடங்களில் பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு தெளிக்கப்படுவதாகவும் புகாா் தெரிவித்தாா். அத்துடன் அப்பகுதியில் தெளிக்கப்பட்டிருந்த பவுடரை கையில் எடுத்து வந்து அதில் பிளீச்சிங் பவுடா் வாசனையே வரவில்லை என்றும் மேயரிடம் கூறினாா்.

அதற்கு, ‘இது பிளீச்சிங் பவுடா் அல்லாமல் என்ன பாண்ட்ஸ் பவுடரா? என மேயா் பிரியா கேட்டாா். மேலும், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையில் தூய்மைப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடா் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது, அதன் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

‘ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படலாம்’: பஹல்காம் தாக்குதலுக்கு முன் எச்சரித்த உளவுத் துறை!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே ஜாபா்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன் உளவுத் துறை எ... மேலும் பார்க்க

முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா

அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது. சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்... மேலும் பார்க்க

சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து

விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அர... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க