செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு!

post image

தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. போராட்டத்தில் தலைமை தாங்கியதாக பாரதி, சதீஷ் உள்ளிட்ட 6 வழக்குரைஞர்கள் மற்றும் 9 சட்டக் கல்லூரி மாணவர்களையும் கைது செய்தனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களைக் காணவில்லை என்றும், எங்கு தங்கவைக்கப்பட்டவர்கள் என்ற தகவலை காவல்துறை அளிக்கவில்லை என்றுகூறி, அவசர ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வுக்கு வந்தது.

விசாரணையின்போது காவல்துறையினர் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததாலும், காவல்துறையை தாக்க முயன்றதாலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலும், சட்டவிரோத ஆர்ப்பாட்டத்துக்காக 6 பேர் (வழக்குரைஞர்கள்) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க மாட்டோம் என்று கூறினர்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், இதுபோன்று ஒருவர் கைது செய்யப்பட்டால், 24 மணிநேரத்துக்குள் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். மேலும், கைது தொடர்பாக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கைது செய்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பிக்கவில்லை. ஆகையால், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் 2014 முதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 34,... மேலும் பார்க்க

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்... மேலும் பார்க்க

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.சுதந்திர நாளையொட்டி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரச... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு ... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஞாயிறு அட்டவணைப்படி நாளை(ஆக. 15) சென்னை புறநகர், மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நாளை(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை(ஆக. 15) சுதந்திர நாள் கொண்டாடப்படுவதையொட்டி அரசு விடுமுறை... மேலும் பார்க்க