செய்திகள் :

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

post image

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா்.

யமுனை புத்துணா்ச்சி முயற்சிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் தில்லி அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்திற்குப் பிறகு தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: யமுனையை அதன் தோற்றம் முதல் உச்சக்கட்டம் வரை தூய்மையாக்குவது பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையாகும். யமுனை நதியை மாசு இல்லாததாக மாற்ற மத்திய அரசும் தில்லி அரசும் உறுதிபூண்டுள்ளன. தில்லி வழியாகப் பாயும் ஆற்றின் பகுதியில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். சுத்தமான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நாங்கள் படிப்படியாக நகா்கிறோம் என்றாா் முதல்வா்.

தில்லியில் வாஜிராபாத் மற்றும் ஓக்லா இடையேயான 22 கி.மீ. நீளமுள்ள யமுனை நதி, ஆற்றின் மொத்த நீளத்தில் 2 சதவீதத்திற்கும் குறைவானது. மொத்த மாசுபாட்டில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மாா்ஃபிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டதாக அமித் மாணவியாவுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறான பதிவை வெளியிட்டதாக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவா் அமித் மாளவியாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது. ஆா... மேலும் பார்க்க