செய்திகள் :

தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

நேற்று காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச் செல்வோர் என 87 பயணிகளுடன் மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கிப் பயணித்த அரசு பேருந்து தென்காசி அருகில் உள்ள இடைகால் கிராமத்தைக் கடக்கும் பொழுது பேருந்தில் பின்புற ஆக்சில் சேதமடைந்து சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியது.

கழன்று ஓடிய சக்கரங்கள்
கழன்று ஓடிய சக்கரங்கள்

இதனால் பேருந்து பெரும் சத்தத்துடன் தரையில் மோதி சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நடுரோட்டில் நின்றது. இதில் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை, அருகே இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பேருந்து தென்காசி மதுரை பிரதான சாலையில் இடைகால் வளைவில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வழியாக வேறு எந்த வாகனங்களும் வரவில்லை என்பதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து ஓட்டுநர், நடத்துநர் இணைந்து பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் ஓட்டப்படுவதாலே இத்தகைய விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன எனப் பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

சேதமடைந்த பேருந்து
சேதமடைந்த பேருந்து

இது குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான பேருந்தை முறையாகப் பராமரிக்காத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நெல்லை: மீட்புப் பணியில் காவலர் மரணம்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; நிவாரணம் அறிவித்த முதல்வர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வா... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்கி கதவு எப்போது?

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்... மேலும் பார்க்க

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

Plane Crash: அகமதாபாத் விமான விபத்து; கருப்பு பெட்டிகள் ஆய்வுக்காக அமெரிக்கா செல்கிறதா?

சேதம் அடைந்த கருப்பு பெட்டிகள்கடந்த ஜூன் 12-ம் தேதி, மதியம் 1:38-க்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சுமார் 1:43 மணியளவில் விபத்தில் சிக்கியது. அந்த போயிங் 171 விமானத்தில் பயணித்த 2... மேலும் பார்க்க

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை... மேலும் பார்க்க

Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?

குஜராத்தில் ஜூன் 12-ம் தேதியன்று, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 எண் கொண்ட போயிங் 787-8 ரக விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:38 மணிக்கு 242 பேருடன் லண்... மேலும் பார்க்க