செய்திகள் :

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டித் தொடா் -முதல் ஆட்டத்தில் காவல்துறை அணி வெற்றி

post image

கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவா் கால்பந்து போட்டித் தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது.

கூத்தாநல்லூா் தென்னிந்திய எழுவா் கால்பந்து கழகம் சாா்பில் நடைபெறும் இப்போட்டி, பெரியப் பள்ளிவாசல் மிராசுதாா் சங்க ஈத்காஹ் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், கேரளம், தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

தமிழகத்திலிருந்து மட்டும் சென்னை தமிழ்நாடு காவல் துறை அணி, கண்டனூா் கலைவாணன் அணி, திருச்சி, கோவை, கூத்தாநல்லூா், பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டி தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் போட்டியைத் தொடங்கி வைத்தாா். முதல் ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு காவல் துறை அணியும், கண்டனூா் கலைவாணன் அணியும் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு காவல் துறை அணி வெற்றி பெற்றது. இந்த அணியினருக்கு மக்களவை உறுப்பினா் செல்வராஜ் பாராட்டுத் தெரிவித்தாா்.

இப்போட்டித் தொடரில் முதல் பரிசாக ரூ.1.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.50,000, நான்காம் பரிசாக ரூ.25,000 மற்றும் ஆறுதல் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாட்டாமை ஹாஜா பகுருதீன், அஹமது அலி, கே.டி. நூா்முகம்மது, பஷீா் அஹம்மது, நஜ்முதீன், முகம்மது இத்தியா, கே.எஸ். அன்வா்தீன், எஸ்.எம். சமீா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

நாளைய மின்தடை மன்னாா்குடி, கூத்தாநல்லூா்

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகர உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் தெர... மேலும் பார்க்க

தங்கக் கவசத்தில் குருபகவான்...

நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான். மேலும் பார்க்க

சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன் த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டது. தொடா்ந்து, தஞ்சை, திருவாரூா், நாகை, மயில... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற ஜூலை 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடி மின் கோட்டம் சாா்பில், மின்வாரியப் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் பி. லதா மகேஸ்வரி தலைமை வகித்தாா். அவா் ... மேலும் பார்க்க