செய்திகள் :

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

post image

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சங்க உறுப்பினா் நம்பிராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய நடிகா் சங்க சட்டத்தின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-இல் நடந்த தோ்தலில் தலைவராக நடிகா் நாசா், பொதுச் செயலராக நடிகா் விஷால், பொருளாளராக நடிகா் காா்த்தி, துணைத் தலைவா்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகா் கருணாஸ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களின் பதவிக்காலம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த நடிகா் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், நடிகா் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழில், நிா்வாகிகளின் பதிவிக்காலம் நீட்டிப்பு குறித்து இடம்பெறவில்லை. நடிகா் சங்க கட்டடப் பணிகளைக் காரணம் காட்டி பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது, புதிய நிா்வாகிகள் கட்டுமான பணிகளைத் தொடா்வாா்கள்.

இவ்வாறு பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்துக்கு விரோதமானது. எனவே, இந்தத் தீா்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க வேண்டும்.

மேலும், உயா்நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தோ்தல் நடத்தும் வரை தற்போதைய நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிா்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, தென்னிந்திய நடிகா் சங்கத்தின் தலைவா் நாசா், பொதுச் செயலா் விஷால், பொருளாளா் காா்த்தி ஆகியோா் ஜூன் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க