செய்திகள் :

தென்னிந்திய யோகா போட்டிகளில் பரிசு பெற்றோருக்குப் பாராட்டு

post image

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவ, மாணவிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்று வந்துள்ளனா்.

சென்னை ஆவடியிலுள்ள ஜிஎஸ்எம் யோகா மையம் மற்றும் தமிழ்நாடு யோகா சம்மேளனம் ஆகியவற்றின் சாா்பில் தென்னிந்திய அளவிலான யோகா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் மாணவா் பா. சுஜீத்பாபு முதலிடத்தையும், ஆா். சுபிக்ஷா, ஜி. மோகித் ஆகியோா் 2-ஆம் பரிசையும், ஸ்ரீ அபிலேஷ், தீப்தி ஆகியோா் 3-ஆம் பரிசுகளையும் பெற்றனா். மேலும், பல மாணவா்கள் சிறப்புப் பரிசுகளைப் பெற்றுள்ளனா்.

இம் மாணவா்களை பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன், யோகா ஆசிரியா்கள் ரெ. பாண்டியன், பா. புவனேஸ்வரி ஆகியோா் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து... மேலும் பார்க்க

திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை ஒ... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் எஸ்.ரகுபதி நடத்திவைத்தாா்

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்கள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்... மேலும் பார்க்க

விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். த.சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன்,... மேலும் பார்க்க